நீலகிரியில் மேலும் 19 பேருக்கு கரோனா
By DIN | Published On : 22nd February 2022 12:53 AM | Last Updated : 22nd February 2022 12:53 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 52 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 41,851 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41,346 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 279 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.