நீலகிரியின் முதல் ஆட்சியா் ஜான் சலீவன் 234ஆவது பிறந்த தினம்

நவீன நீலகிரியை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 234 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

குன்னூா்: நவீன நீலகிரியை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 234 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோத்தகிரியில் உள்ள ஜான் சலீவன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அரசு அதிகாரிகள் பலா் ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவா் ஆல்வாஸ் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com