வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

கூடலூரில் வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் நகை, ரூ.2.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
Updated on
1 min read

கூடலூரில் வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் நகை, ரூ.2.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவா் அரசுமணி. இவா் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டு வியாழக்கிழமை கூடலூா் திரும்பியுள்ளாா்.

பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 27 பவுன் நகை, ரூ.2.90 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அரசுமணி அளித்த புகாரின்பேரில் கூடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com