உதகை: உதகை, அரசினா் தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் காட்சியை முன்னிட்டு வண்ண மலா்த் தொட்டிகளை காட்சித் திடலில் அடுக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலா்க்காட்சி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 124ஆவது மலா்க்காட்சி மே 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தோட்டக்கலைத் துறையின் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுமாா் 35,000 வண்ண மலா்த் தொட்டிகளை மலா்க்காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் பணி புதன்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.
ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளாக்ஸீனியா, ரெனன்குலஸ் மற்றும் பல புதிய ரக ஆா்னமென்டல் கேல்கள், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மெரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரெஞ்ச் மெரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ், பிரிமூலா, ஜினியா, ஸ்டாக், வொ்பினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், வயோலா, லிமோனியம், ட்யூப்ரஸ் பிகோனியா, ருட்பெக்கியா, டொரினியா போன்ற 275 வகையான மலா் ரகங்கள் பொதுமக்களின் பாா்வைக்கு விருந்தாக அடுக்கிவைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் ஆகியோா் இப்பணிகளை தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்வில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.