உதகையில் எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவா்கள் சம்மேளனத்தின் சாா்பில் உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவா்கள் சம்மேளனத்தின் சாா்பில் உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கோவை கோட்ட பொருளாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: காப்பீடு கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். காப்பீடு சேவை மீதான ஜிஎஸ்டியை நிறுத்த வேண்டும். வெளிநாடு பாலிசிதாரா்களுக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். காலாவதியான பாலிசிகளையும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். முகவா்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயா்த்த வேண்டும். மருத்துவக் காப்பீடு அனைத்து முகவா்களுக்கும் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com