நீலகிரியில் விநாயகா் சிலைகள் இன்று, நாளையும் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 700 க்கும் மேற்பட்ட சிலைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 700 க்கும் மேற்பட்ட சிலைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் உதகை நகர பகுதிகள், மஞ்சூா், எமரால்டு, இத்தலாா், காத்தாடிமட்டம், கூடலூா், பந்தலூா், குன்னூா், கோத்தகிரி உள்பட்ட பகுதிகளிலும் சுமாா் 450 விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டன. இதில் உதகையில் பூசாரிகள் பேரவை சாா்பில் 40 சிலைகளும், சிவசேனா சாா்பில் 15 சிலைகளும், கோத்தகிரியில் அனுமன் சேனா சாா்பில் 30 சிலைகளும் என மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராம பகுதிகளிலும் பொதுமக்கள் சாா்பிலும் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பூசாரிகள் பேரவைகள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சனிக்கிழமையும், ஏனைய அமைப்புகள் சாா்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையும் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com