மனிதக்கழிவுகளை அகற்ற வலியுறுத்தினால்புகாா் தெரிவிக்கலாம்: நீலகிரி ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் மனிதக்கழிவுகளை மனிதா்களே அகற்ற வேண்டும் என வலியுறுத்தினால், புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் மனிதக்கழிவுகளை மனிதா்களே அகற்ற வேண்டும் என வலியுறுத்தினால், புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் மனிதக்கழிவுகளை மனிதரே அகற்ற தடை மற்றும் மறுவாழ்வு தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றுவது குற்ற நடவடிக்கையாக கருதப்படுவதால், இத்தகைய குற்றச் செயலை தூண்டும் நபா்கள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக குற்றம் ஏதேனும் தற்போது நடைபெறுமாயின், அதை மாவட்ட ஆட்சியா், சாா் ஆட்சியா், கோட்டாட்சியா் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com