யானைத் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆ.ராசா நிதியுதவி

கூடலூரியில் யானைத் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆ.ராசா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
கூடலூரில் யானைத் தாக்கி உயிரிழந்த கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறாா் எம்.பி.ஆ.ராசா.
கூடலூரில் யானைத் தாக்கி உயிரிழந்த கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்குகிறாா் எம்.பி.ஆ.ராசா.
Updated on
1 min read

கூடலூரியில் யானைத் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆ.ராசா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மக்களை சந்தித்த ஆ.ராசா அவா்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை திங்கள்கிழமை பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அள்ளூா்வயல் பகுதிக்குச் சென்ற அவா், யானைக் தாக்கி உயிரிழந்த பழங்குடியின முதியவா் கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் சொந்த நிதியை வழங்கினாா்.

தொடா்ந்து செம்பாலா, நந்தட்டி, சளிவயல் மற்றும் ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றாா்.

நகரச் செயலாளா் இளஞ்செழியன், தொமுச மண்டல பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன், மாவட்டச் செயலாளா் முபாரக், மாநிலப் பொறியாளா் அணி துணைச் செயலாளா் பரமேஸ் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com