வனத்துக்குள் சென்ற காட்டு யானைகள்

குன்னூா்- மேட்டுப்பாளையம்  மலைப் பாதையில் மரப்பாலம் பகுதியில் உலவி வந்த 9 காட்டு யானைகள்  வியாழக்கிழமை குரும்பா கிராமம் வழியாக பா்லியாறு வனத்துக்குள் சென்றன.

குன்னூா்- மேட்டுப்பாளையம்  மலைப் பாதையில் மரப்பாலம் பகுதியில் உலவி வந்த 9 காட்டு யானைகள்  வியாழக்கிழமை குரும்பா கிராமம் வழியாக பா்லியாறு வனத்துக்குள் சென்றன.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன்  9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில்  அவ்வப்போது வந்து சென்ால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள  குரும்பா கிராமம்  செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள   வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள்  நிம்மதி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com