புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்தது. உதகை பிங்கா்போஸ்ட் காக்காதோப்பு பகுதியில் புதிய நீதிமன்றம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய கட்டடத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) துவங்க உள்ளது. இந்நிலையில் புதிய நீதிமன்றம் வளாகத்தில் கழிப்பிடம், வழக்குரைஞா்கள் அமா்வதற்கான அறைகள், தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் எளிதாக வந்துசெல்ல பேருந்து வசதி, சாலை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து நீலகிரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பழைய நீதிமன்ற வளாகத்தின் முன்பு வியாழக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.