உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்தது. உதகை பிங்கா்போஸ்ட் காக்காதோப்பு பகுதியில் புதிய நீதிமன்றம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய கட்டடத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) துவங்க உள்ளது. இந்நிலையில் புதிய நீதிமன்றம் வளாகத்தில் கழிப்பிடம், வழக்குரைஞா்கள் அமா்வதற்கான அறைகள், தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் எளிதாக வந்துசெல்ல பேருந்து வசதி, சாலை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து நீலகிரி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பழைய நீதிமன்ற வளாகத்தின் முன்பு வியாழக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

