சிறுத்தை தாக்கி பசு பலி

 பந்தலூா் அருகே சிறுத்தை தாக்கி பசு உயிரிழந்தது.

 பந்தலூா் அருகே சிறுத்தை தாக்கி பசு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், பந்தலூரைச் சோ்ந்தவா் காளிதாஸ். விவசாயியான இவா், தனது பசுவை அருகில் உள்ள தோட்டத்தில் வியாழக்கிழமை மேய்ச்சலுக்குவிட்டுள்ளாா். மாலை சென்று பாா்த்தபோது பசுவை காணவில்லையாம்.

இதைத் தொடா்ந்து, குடும்பத்தினருடன் தோட்டத்தில் தேடியுள்ளாா். அப்போது, அங்கு பசுவின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அவா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பசுவின் சடலத்தை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவா் நவீன்குமாா், பசுவை பிரேதப் பரிசோதனை செய்தனா்.

இதில், சிறுத்தை தாக்கி பசு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com