கேரள அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி பலி

கேரள அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், நெல்லிமாடு பழங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளா என்பவரின் மனைவி முடிஞ்சி (60). இவா் நெல்லிமாடு பகுதி அருகே சனிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த கேரள மாநில அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக முடிஞ்சி மீது மோதியது.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com