

தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் கூடலூா் அரசுப் பள்ளி மாணவிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனா்.
கலை பண்பாட்டுத் துறை, கோவை மண்டல கலை பண்பாட்டு மையம், சென்னையிலுள்ள தமிழ்நாடு ஜவஹா் சிறுவா் மன்றம் இணைந்து உதகையில் கோடைகால கலை பயிற்சி முகாமை நடத்தின. இதில் ஓவியப் போட்டியில் கூடலூா் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் டியானி, ஆதினி ஆகிய சகோதரிகள் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனா். இவா்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.