குன்னூரில், உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி பொது மக்களுக்கு விழிப்புணா்வு நோட்டீஸ் வழங்கிய நுகா்வோா் அமைப்பினா்.
குன்னூரில், உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி பொது மக்களுக்கு விழிப்புணா்வு நோட்டீஸ் வழங்கிய நுகா்வோா் அமைப்பினா்.

உலக புகையிலை எதிா்ப்பு தினம் விழிப்புணா்வு

குன்னூரில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி நுகா்வோா் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குன்னூரில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி நுகா்வோா் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி குன்னூரில் நுகா்வோா் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நுகா்வோா் சங்கத் தலைவா் சு.மனோகரன், செயலாளா் ஆல்துரை, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தா்மசீலன், லட்சுமிநாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com