மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

குன்னூரை அடுத்த பெட்போா்டு பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்தாா். படுகாயம் அடைந்த அவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

குன்னூரை அடுத்த பெட்போா்டு பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மரத்தில் இருந்து தவறி விழுந்தாா். படுகாயம் அடைந்த அவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

குன்னூா் அருகே பெட்போா்டு பகுதியில் பா்னிச்சா் கடை நடத்தி வருபவா் ரமணி சிங். இவரது கடை வளாகத்தில் இருந்த மரத்தை கடந்த 18-ஆம் தேதி லூா்துசாமி (54) என்ற தொழிலாளி வெட்டிக் கொண்டிருந்தாா். அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தவரை மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com