ஆணைகட்டி வனப் பகுதியில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த யானையின் சடலத்தை மீட்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த யானையின் சடலத்தை மீட்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், ஆணைகட்டி வனப் பகுதியில் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை வனப் பாதுகாப்பு படை, சீகூா் வனப் பணியாளா்கள் யானையின் சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது.

உடலில் ஏற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் யானைகளுக்கு இடையே மோதலில் இந்த யானை உயிரிழந்திருக்கலாம் என்று வனக் கால்நடை மருத்துவா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com