ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சாா்பில் கூடலூரில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி, கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை இணைந்து கூடலூா் புனித தாமஸ் பள்ளி வளாகத்தில் நடத்திய இம்முகாமை பள்ளியின் தாளாளா் ஜோஜி ஓமன் பிலிப் ஆசியுரை வழங்கி தொடங்கிவைத்தாா்.
முகாமில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி நிா்வாகிகள் விஜயகுமாா், பரசுராமன், தமிழழகன், தேவ ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.