பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக் கடைகளுக்கு ‘சீல்’

குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலாத் தளத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த 2 கடைகள் மற்றும் 2 குடோன்களுக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
Updated on
1 min read

குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலாத் தளத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த 2 கடைகள் மற்றும் 2 குடோன்களுக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலாத் தளத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு உள்ளதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து வட்டாட்சியா் சிவகுமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தடை செய்யப்பட்ட ஒரு லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் மற்றும் சோடா பாட்டில்களை பறிமுதல் செய்து இரண்டு கடைகள் மற்றும் இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். பின்னா் அந்தக் கடைகளுக்கு மொத்தம் ரூ. 26,300 அபராதம் விதித்தனா்.

ஆய்வின் போது வருவாய் ஆய்வாளா்கள் லலிதா, சுகந்தி, சிவராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com