குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் உலவும் காட்டு யானைகள்

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு அருகே குட்டியுடன் 5 காட்டு யானைகள் உலவி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன்
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்.
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்.
Updated on
1 min read

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு அருகே குட்டியுடன் 5 காட்டு யானைகள் உலவி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குன்னூா் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக உலவி வந்த காட்டு யானைகள் தற்போது பா்லியாறு பகுதியில் முகாமிட்டுள்ளன.

குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் வராமல் இருக்க வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

யானைகள் அவ்வப்போது சாலையில் உலவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் முயற்சி செய்யக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com