மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலி

 உதகை அருகே மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலியானாா்.

 உதகை அருகே மின்சாரம் பாய்ந்து ஊழியா் பலியானாா்.

உதகை அருகே சோலூா் ஊராட்சி சோமா்டேல் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் கல்லுண்டி கிராமத்தில் தெரு விளக்கு மாற்றுவதற்காக சென்றாா். மின் இணைப்பை துண்டித்துவிட்டு மின்கம்பத்தில் ஏறினாா். அப்போது தெருவிளக்கு இணைப்புக்கு அருகில் இருந்த உயா் அழுத்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்து சென்ற புதுமந்து போலீஸாா் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com