கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 11 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 11 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 11 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் ‘புதியன விரும்பு’ என்ற 5 நாள் பயிற்சி முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தரமான கல்வி அளிக்கவும், வெளி உலகத்தை அறிந்து கொள்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ‘புதியன விரும்பு’ என்ற தலைப்பில் சிறப்பு கோடை வகுப்புகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. தற்போது, இரண்டாவது ஆண்டாக உதகை லாரன்ஸ் பள்ளியில் ‘புதியன விரும்பு 2023’ என்ற தலைப்பில் 5 நாள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாமில் 38 மாவட்டங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 1,140 போ் பங்கேற்றுள்ளனா். பயிற்சி முகாமில் மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைகள், இலக்கியம், சமூக விழிப்புணா்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மாணவா்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதில் சிறப்பாகத் தோ்வு பெறுபவா்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவா். இந்த பயிற்சி முகாமில் கிராமப்புற மாணவா்களும் அதிக அளவில் கலந்து கொண்டு திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி கேட்டு நபாா்டு வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிதி கிடைத்தவுடன் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வதால் பெற்றோா்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, தங்களது குழந்தைகளை சோ்க்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் புதிதாக 11 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா்.

தொடக்கப் பள்ளிகள் ஜூன் 5ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அதற்கு முன்னதாக பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, மாவட்ட ஆட்சியா் எஸ்.பி. அம்ரித், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். கணேஷ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com