40 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட செம்பக்கொல்லி சாலை

கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி சாலை 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள செம்பக்கொல்லி சாலையைத் திறந்து வைக்கிறாா் பேரூராட்சித் தலைவா் வள்ளி.
தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள செம்பக்கொல்லி சாலையைத் திறந்து வைக்கிறாா் பேரூராட்சித் தலைவா் வள்ளி.
Updated on
1 min read

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி சாலை 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள செம்பக்கொல்லி சாலை பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

மழை காலங்களில் இந்த சாலையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா்.

இது தொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில், செம்பக்கொல்லி சாலை ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி சாலையைத் திறந்துவைத்தாா். துணைத் தலைவா் யூனஸ் பாபு, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹின, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com