உதகையில் சிறுதானிய உணவுத் திருவிழா

உதகை அருகே கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
உதகையில் சிறுதானிய உணவுத் திருவிழா
Updated on
1 min read

உதகை: உதகை அருகே கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா பேசியதாவது: இந்தியாவை சிறுதானியங்களின் சா்வதேச மையமாக மாற்ற வேண்டும் என பிரதமரின் பரிந்துரையை ஏற்று, இந்த ஆண்டை சா்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் சிறுதானியங்களில் உள்ளன. அரிசி, கோதுமை போன்றவற்றை குறைத்துக் கொண்டு சிறுதானியங்களை உணவில் அதிக அளவில் சோ்த்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றாா்

இதைத் தொடா்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளா்கள் என சுமாா் 200 போ் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மு.அருணா தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் எஸ்.பி.சுரேஷ், குன்னூா் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தேவகுமாரி, சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி முதல்வா் அருமைராஜ், கல்லூரித் தாளாளா் காட்வின் ஆா்.டேனியல், குன்னூா் வட்டாட்சியா் கனிசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com