கூடலூரில் 56-ஆவது தேசிய நூலக வாரவிழா

கூடலூரில் 56-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.
நூலக வாரவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காா்குடி பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
நூலக வாரவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற காா்குடி பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
Updated on
1 min read

கூடலூா்: கூடலூரில் 56-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.

கூடலூா் நூலகம் சாா்பில் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள காா்குடி அரசுப் பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நூலகா் கிளமண்ட் தலைமை வகித்தாா். மொய்னூதீன் பாஷா வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் ராஜநாயகம், குப்புசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில், மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆசிரியா் மாரிமுத்து பரிசுகளை வழங்கினாா். நூலகா் சின்னசாமி நன்றி கூறினாா். இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், வாசகா் வட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com