தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் சாதனை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாதனை ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் தலைமை ஆசிரியா் ஐய்யப்பன்.
சாதனை ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் தலைமை ஆசிரியா் ஐய்யப்பன்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் சாதனை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு சங்கத்தின் துணைத் தலைவா் ஆனந்தராஜா தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கணேசன் வரவேற்றாா். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஐய்யப்பன், தொழிலதிபா் மணிமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு, நல்லாசிரியா் விருது பெற்ற பால்துரை, அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா் நல்லக்குமாா், சிலம்பம் பயிற்சி ஆசிரியா் வேலாயுதம் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்தனா்.

தமிழ்ச் சங்க செயலாளா் நாகநாதன், பொறுப்பாளா்கள் மணிவாசகம், ஸ்ரீகாந்த், பரமசிவம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com