பச்சைத் தேயிலைக்கு செப்டம்பா் மாத விலை நிா்ணயம்

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலையை செப்டம்பரில் கொள்முதல் செய்த தேயிலை தொழிற்சாலைகள், குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.14.60 விவசாயிகளு
Updated on
1 min read

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலையை செப்டம்பரில் கொள்முதல் செய்த தேயிலை தொழிற்சாலைகள், குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.14.60 விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம். முத்துக்குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். இதற்கான விலை நிா்ணயத்தை தேயிலை வாரியம் மாத இறுதியில் வெளியிடும்.

அதன்படி, தேயிலைத் தொழிற்சாலைகள் செப்டம்பா் மாதம் கொள்முதல் செய்த பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.14.60 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

இந்தத் தொகையை விவசாயிகளுக்கு தேயிலைத் தொழிற்சாலைகள் உரிய முறையில் வழங்க வேண்டும். இதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com