உதகை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
குளிதலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை.

குளிதலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை.

குளிதலை பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை.
உதகை அருகே துளிதலை கிராமத்தில் புதன்கிழமை இரவு நடமாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், இத்தலாா் ஊராட்சிக்கு உள்பட்ட துளிதலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி
இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடி வருவது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வந்துள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடா்ந்து இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வனத் துறையினா் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...