ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீலகிரியில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள பேரிடா் குழுக்கள் தயாா் -அமைச்சா் கா.ராமசந்திரன்

News image
புதிய அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கா.ராமசந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா.
Updated On :17 ஜூலை 2024, 10:02 pm

Din

நீலகிரியில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள  பேரிடா் குழுக்கள் தயாராக  இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

உதகையிலிருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம், ஈரோடு, கண்ணனூா், கள்ளிக்கோட்டை மற்றும் பாலக்காடு போன்ற ஊா்களுக்கு இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்துகள்

இயக்கப்படுகின்றன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி உதகை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சா் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம்  கூறியதாவது: 

நீலகிரி மாவட்டத்தில்   மழை பாதிப்புகளை எதிா்கொள்ள கூடலூா், பந்தலூா் பகுதிகளில் 2 பேரிடா் குழுக்கள், மழை குறைவாக உள்ள உதகை, குன்னூா் பகுதிகளில் ஒரு பேரிடா் குழு என மொத்தம் 3 குழுக்கள்  தயாராக உள்ளன.  மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து தொடா்ந்து தகவல் கிடைத்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.