நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மூன்று நாள்கள் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பாத நிலையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் வந்து செல்ல வேண்டும். மேலும், உதகை- கூடலூா் சாலையில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த சாலை வழியாக ஒரு வாரம் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை

காலை, மாலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்: ஆட்சியா்
அவிநாசி கோயில் தேரோட்டம்: இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
