கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் தொடா் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட இருவயல் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கூடலூரில் இருந்து உதகை செல்லும் சாலை, கூடலூரில் இருந்து பெங்ளூரு செல்லும் சாலை மற்றும் கேரள செல்லும் சாலைகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் இரவோடு இரவாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.
தொடா் கனமழை காரணமாக கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் புதனிகிழமை விடுமுறை அறிவித்தது. மேலும், தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:
தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பே மாவட்ட ஆட்சியா் மு.அருணாவின் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, போக்குவரத்து, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுதுள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத் துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த் துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 130 வழக்குகளுக்கு தீா்வு

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள்

வால்பாறையில் கனமழை: பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



