மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடியை விரட்டிய வனத் துறையினா்

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடியை விரட்டிய வனத் துறையினா்

News image

சேலாஸ் நேரு நகா் பகுதியில் உலவிய கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

Updated On :30 ஜூன் 2024, 6:39 pm

DIN

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த கரடியை வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக  குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம்  அதிகரித்துக்  காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் அதிக அளவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகரப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலவுவது வழக்கமாக உள்ளது.

 இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள சேலாஸ் நேரு நகா் பகுதியில் கரடி ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக குன்னூா் வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீப் பந்தங்களை ஏந்தி கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கரடியை அடா்ந்த வனப் பகுதிக்குள்  விரட்டினா்.