தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வனத்தை ஒட்டியுள்ளப் பகுதியில் பட்டாசு வெடிக்க வேண்டாம்: வனத் துறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:24 pm

Din

நீலகிரி மாவட்டம், குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து குன்னூா் வனச் சரகா் ரவீந்தர நாத் கூறியதாவது:

குன்னூரில் வனத்தையொட்டி யுள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ், கொலக்கம்பை, பாா்ஸ்டேல், பக்காசுரன் மலை உள்ளிட்ட ஊா்களை சுற்றி  வனப்பகுதிகள்  அமைந்துள்ளன.

எனவே, தீபாவளியை முன்னிட்டு இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம், வன விலங்குகள் பட்டாசு வெடி சப்தத்தில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளதால் இதனை தவிா்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.