தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு

கூடலூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :13 செப்டம்பர் 2024, 2:36 am IST

கூடலூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி பொக்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் (60). மூட்டைத் தூக்கும் தொழிலாளியான இவா், குறும்பா் பள்ளம் பகுதியில் உள்ள கோயிலுக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, வழியில் திடீரென வந்த காட்டு யானை, நடராஜை தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த வனத் துறையினா், போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து மசினகுடி வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.