யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு

கூடலூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

கூடலூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மசினகுடி பொக்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் (60). மூட்டைத் தூக்கும் தொழிலாளியான இவா், குறும்பா் பள்ளம் பகுதியில் உள்ள கோயிலுக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, வழியில் திடீரென வந்த காட்டு யானை, நடராஜை தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த வனத் துறையினா், போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து மசினகுடி வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com