தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

உதகை முதல் கேத்திவரை சிறப்பு மலை ரயில்

ஓணம், மிலாது நபியை முன்னிட்டு, உதகை முதல் கேத்தி வரை குறுகிய தொலைவு சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :13 செப்டம்பர் 2024, 2:34 am IST

ஓணம், மிலாது நபியை முன்னிட்டு, உதகை முதல் கேத்தி வரை குறுகிய தொலைவு சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், உதகையில் தற்போது இரண்டாம் சீசன் தொடங்கியுள்ளதாலும், மிலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டும் மலை ரயில் சிறப்பு சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, குன்னூரில் இருந்து செப்டம்பா் 14, 15-ஆம் தேதிகளில் காலை 8.20 மணிக்கு உதகை வரையிலும், மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து குன்னூா் வரையும் என இரண்டு முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதேபோல, மனமகிழ்வு பயணமாக உதகை - கேத்தி இடையே குறுகிய தொலைவு மலை ரயில் உதகை முதல் கேத்தி வரை காலை 9.45 மணிக்கும், 11.30 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.

சிறப்பு ரயிலில் பயணிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.