டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

சரிந்தது முட்டைக்கோஸ் விலை

News image

கோத்தகிரியில் விளைந்து காணப்படும் முட்டைகோஸ்.

Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:11 am IST

நீலகிரியில் விளையும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல  ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10  மட்டுமே விலை கிடைத்து வருவதால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும்   முட்டைக்கோஸ்கள் கேரளம்,கா்நாடகம், சென்னை கோயம்பேடு போன்ற சந்தைகளில் விற்கப்பட்டு  வருகின்றன. 

உதகை, கோத்தகிரி, குன்னூா் போன்ற பகுதிகளில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த சில நாள்களாக  மண்டிகளில் சராசரியாக ஒரு கிலோவுக்கு  ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை தரத்துக்கு ஏற்றாா்போல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது கிடைக்கும் விலை அறுவடை கூலிக்கும், போக்குவரத்து  செலவுக்கும்  கூட  கட்டுபடியாவதில்லை என்பதால் விவசாயிகள்  பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனா்.