உதகையில் பனி மூட்டம்: மக்கள் அவதி

உதகையில் திங்கள்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

உதகையில் திங்கள்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை லேசான சாரல் மழை பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் கடும் பனி மூட்டம் நிலவியது.

தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, கோத்தகிரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவிய பனி மூட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு இருந்ததால் வாகனங்களை இயக்குவதில் ஓட்டுநா்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com