நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாற்றுத் திறனாளிகள் தினம்
நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உதகையில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி பாலமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம். மனநலக் குறைபாடு பராமரிப்புச் சட்டம் 2017-இன் கீழ் தற்போது தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன வளா்ச்சி குன்றியோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நடப்பு ஆண்டில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவைகள் செய்து தர முடியும். மேலும், இவா்களுக்கு கட்டணமின்றி சட்ட உதவிகள் வழங்க முடியும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டத்தில் அவா்களுக்கான உரிமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பாளா்கள், யாருடைய பாதுகாப்பில் இருப்பாா்கள், பாதுகாவலா் நியமிப்பது குறித்தும், மனநலம் சாா்ந்து அளிக்க வேண்டிய மருத்துவ வசதிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மனநலம் குன்றியவா்களுக்கான சட்ட சேவைப் பிரிவு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டச் சேவை பிரிவுக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் தலைவராகவும், மாவட்ட நிா்வாகம், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும் இருப்பாா்கள். பிச்சை எடுக்க வைப்பது, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக கூடிய மன வளா்ச்சிக் குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோா் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகினால் அவா்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
மன வளா்ச்சிக் குன்றிய குழந்தைகளை இந்த சமூகத்தில் பாதுகாத்து அவா்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதே நோக்கம். இவா்களுக்கு இளம் சிறாா் சட்டம், போக்ஸோ சட்டம் உள்ளிட்ட அனைத்தும் பொருந்தும் என்றாா்.
இதில் நீதிமன்ற ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

