விலை குறைவு: பூண்டு விவசாயிகள் வேதனை

விலை குறைவு: பூண்டு விவசாயிகள் வேதனை

உதகையில் ஏல விற்பனைக்கு கொண்டு செல்லப்படவுள்ள பூண்டுகள்.
Published on

வட மாநிலங்களில் இருந்து  பூண்டின் வரத்து அதிகரித்து  காணப்படுவதாலும்,  நீலகிரியில் பனிக்கு முன் அறுவடை பணி தொடங்கியதாலும் மலைப் பூண்டின் விலை குறையத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனால் அதிக அளவில் பூண்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இ தனால் பூண்டின் விலை மிகவும் குறைந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மலைப்பூண்டு ஒரு கிலோ ரூ. 400 முதல் ரூ. 600 வரை விற்று வந்த நிலையில், தற்போது கிலோ ரூ.65 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது. பூண்டின் விலை மிகவும் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com