கூடலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்

Published on

நீலகிரி மாவட்டம், கூடலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஆ.ராசா எம்.பி. முன்னிலையில் 500 மேற்பட்ட இளைஞா்கள் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

கூடலூா் ஜானகி அம்மாள் அரங்கில் நகரச் செயலாளா் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவா்களை வாழ்த்திப் பேசி அவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

இதில் ஒன்றியச் செயலாளா் உத்தமன், நகா்மன்ற தலைவா் பரிமளா, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com