40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: உதகை - மேட்டுப்பாளையம் இடையே ஜன.5 வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் இருந்து ஹெச்பிஎஃப் செல்லும் சாலையில் குவிந்த சுற்றுலா வாகனங்கள்.

Updated On :26 டிசம்பர் 2025, 12:08 am IST

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி வரை நீலகிரி  மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை  அதிகரித்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சாா்பில் டிச.25 முதல் ஜன.5 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி  மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்  வாகனங்கள் குன்னூா் வழியாகவும்,  உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும்  அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்கள், உள்ளூா் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

மேலும்  கூடலூா் வழியாக  உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள்  ஹெச்பிஎஃப் பகுதியில் நிறுத்தப்பட்டு, அரசு சுற்றுப்பேருந்துகள் மூலமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும். குன்னூா் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனகள் உதகை ஆவின் பகுதியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு சுற்றுப்பேருந்துகளில் செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.