கூட்டுறவு வார விழா: 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடியில் நலத் திட்ட உதவிகள்

கூட்டுறவு வார விழா: 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடியில் நலத் திட்ட உதவிகள்

Published on

கூட்டுறவு வார விழாவில் 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

விழாவுக்கு கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சித்ரா தலைமை வகித்தாா்.

விழாவில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அரசுக் கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் முன்னிலையில், 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: கூட்டுறவுத் துறையின் மூலம் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அத்தியாவசிய பொருள்களை வீட்டுக்கே சென்று வழங்கும் தாயுமானவா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

72ஆவது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் சங்கப் பணியாளா்களுக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கும் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், உதகை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com