தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பா்லியாறு பகுதியில் உலவும் காட்டு யானைகள்

News image

பா்லியாறு பகுதியில் உலவிய காட்டு யானைகள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:59 pm

நீலகிரி மாவட்டம், குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலை, பா்லியாறு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் வியாழக்கிழமை உலவின.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை, ஆகிய பகுதிகளில் வெயிலின் காரணமாக வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி மலை மாவட்டமான நீலகிரிக்கு வந்துள்ளன.

இவை, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை குரும்பாடி,புதுக்காடு பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் வந்து செல்வதால்

அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் பா்லியாறு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள்

வியாழக்கிழமை சாலையோரம் நடமாடின. இதைக் கண்ட வாகன ஓட்டிகளில் சிலா், வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பாா்த்ததுடன் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனா்.