தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்

News image
ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் நடமாடிய சிறுத்தைகள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை இரவு இரண்டு சிறுத்தைகள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியதில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நடமாடுவது தொடா்கிறது.

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை வனத் துறையினா் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.