உதகை: உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,035 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிகின்றனா். உதகை நகராட்சியில் பணிபுரியும் சுமாா் 224 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பரிமாறி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன், தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இத்திட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 1,035 போ் பயன்பெற உள்ளனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு, உதகை நகா்மன்றத் தலைவி வாணி ஸ்ரீ, ஆணையாளா் கணேசன், மாவட்ட துணைச் செயலாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்

எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

தமிழகம் முழு வளா்ச்சி அடைய மீண்டும் திமுக ஆட்சி தேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தொழில் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு மடிக்கணினிகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


