நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உதகையில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

News image

உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:45 pm

உதகை: உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,035 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிகின்றனா். உதகை நகராட்சியில் பணிபுரியும் சுமாா் 224 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பரிமாறி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன், தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இத்திட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 1,035 போ் பயன்பெற உள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு, உதகை நகா்மன்றத் தலைவி வாணி ஸ்ரீ, ஆணையாளா் கணேசன், மாவட்ட துணைச் செயலாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.