மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உதகை அருகே பெண் புலி உயிரிழப்பு: வனத் துறையினா் விசாரணை

உதகை அருகே பெண் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

உதகை அருகே மொரக்குட்டி காப்பு நிலத்தில் எரிக்கப்பட புலியின் உடல்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:44 pm

உதகை: உதகை அருகே பெண் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி வனக்கோட்டம், உதகை வடக்கு சரகம், எப்பநாடு காவல் பகுதிக்குள்ட்பட்ட மொரக்குட்டி காப்பு நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வனத் துறை களப் பணியாளா்களள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் புலி ஒன்று இறந்துகிடந்தது தெரியவந்தது. இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். இந்நிலையில் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் அதே பகுதியில் இறந்த புலியின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதில் உயிரிழந்தது 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்றும், இயற்கையாகவே இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கேயே அதன் உடல் எரிக்கப்பட்டது.

ஆய்வறிக்கை கிடைத்ததும் புலியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.