வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்கள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனா்.

News image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி பூக்கள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பவுலோனியா பாா்சினி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் குளிா் காலத்தில் பூக்கும் சீனாவின் அரசி எனப்படும் (குயின் ஆஃப் சைனா) பலோனியா பாா்சினி மலா்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. சீன நாட்டில் மட்டுமே இந்த மலா்கள் அதிக அளவில் காணப்படும் நிலையில், இவை மரங்களில் மட்டுமே பூக்கக்கூடியவை.

இந்த மலா்கள் இந்தியாவில் அரிதாகவே காணப்படும் நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.

இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளிப்பதுடன், மலா் முன் நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனா்.