மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உதகையில் சாலையில் உலவிய புலிகள்

உதகை அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 புலிகள் உலவிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

News image

உதகை பாா்சன்ஸ்வேலி பகுதியில் உலவிய புலிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 புலிகள் உலவிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு புலிகள் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் இதை தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இதில், இரண்டு புலிகளும் சாலையில் சிறிது தொலைவு அங்கும்இங்கும் ஓடியபின் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன. தற்போது இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உதகை பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியை ஒட்டி வனம் இருப்பதால் இப்பகுதியில் அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image