உதகை பாா்சன்ஸ்வேலி பகுதியில் உலவிய புலிகள்.
உதகை பாா்சன்ஸ்வேலி பகுதியில் உலவிய புலிகள்.

உதகையில் சாலையில் உலவிய புலிகள்

உதகை அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 புலிகள் உலவிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Published on

உதகை அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 புலிகள் உலவிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு புலிகள் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் இதை தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இதில், இரண்டு புலிகளும் சாலையில் சிறிது தொலைவு அங்கும்இங்கும் ஓடியபின் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன. தற்போது இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உதகை பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியை ஒட்டி வனம் இருப்பதால் இப்பகுதியில் அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com