பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கூடலூரில் தொழிற்சங்கங்கத்தினா் மறியல்

News image

கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:29 pm

பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் ஏ.முகமது கனி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், மாவட்ட அமைப்பாளா் கே.மகேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன், பிஎல்ஏ மாவட்டப் பொருளாளா் ராஜு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் குஞ்சுமுகமது உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா் முன்னணியின் தலைவா் சகாதேவன், நிா்வாகி ராஜேந்திர பிரபு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.