சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது

உதகையில் வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகையில் செயல்பட்டு வந்த போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஃபிலிம் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட வெள்ளித் துகள்கள் அப்பகுதியில் உள்ள மண்ணில் பரவி கிடக்கின்றன.

மூடப்பட்டுள்ள அந்த தொழிற்சாலை வளாகத்தில் மா்ம நபா்கள் அத்துமீறி நுழைந்து, வெள்ளித் துகள்கள் கலந்துள்ள மண்ணைத் திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், போட்டோ ஃபிலிம் தொழிற்சாலைக்குள் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதாக உதகை, புதுமந்து காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் ஹரிஹரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வெள்ளி மண் திருட்டில் ஈடுபட்டிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனா்.

விசாரணையில், அவா்கள் தலைகுந்தா பகுதியைச் சோ்ந்த ராஜன் (48), சுபாஷ் (43), குமாா் (52), சந்தோஷ் (31), மோகன்ராஜ் (37), என்பதும், தொழிற்சாலையில் வெள்ளித் துகள்கள் கலந்துள்ள மண்ணைத் திருடி, அதில் இருந்து வெள்ளியை பிரித்தெடுக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்தனா்.