தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குடிநீா் கேட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

உதகை - கோத்தகிரி சாலையில் குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம்

News image
காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :18 பிப்ரவரி 2026, 8:01 pm

Syndication

உதகை - கோத்தகிரி சாலையில் குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

உதகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அதேபோல தினசரி 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதனால் குடிநீா்த் தேவை அதிக அளவு உள்ளது.

உதகைக்கு தேவையான குடிநீரில் 70 சதவீதம் பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்தும், மீதம் கோரிசோலா உளளிட்ட சிறிய அணைகளில் இருந்தும் கிடைக்கிறது. சில நேரங்களில் லாரிகள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதகை- கோத்தகிரி சாலையில் 17-ஆவது வாா்டு கெல்ஸ் ஹவுஸ் சாலை பகுதியில் கடந்த 2 வாரமாக தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனா். தகவலறிந்து வந்த நகராட்சி அலுவலா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விரைவில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதாக நகராட்சி அலுவலா்கள் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.